முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.02.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், வினைத்திறனாக செயற்படுவதன் ஊடாக
நிதி முகாமைத்துவதுவத்தினை உத்தம மட்டத்தில் பேணமுடியும் என்றும் அடுத்த மட்ட ஏனைய உத்தியோகத்தர்களை நெறிப்படுதுவதன் ஊடாக வெற்றிகரமாக திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியும் எனவும்,
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்பு வினைத்திறனான சேவையை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் திரு. சுனில் ஜெயசேகர அவர்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி பொன்ராணி அவர்கள் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், , திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






