பாதுகாப்பும் சமூகங்களின் நலன் மேம்படுத்தும் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (29.05.2025) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இடையே எல்லோரையும் உள்ளடக்கும் ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து 20 கிராம அலுவலர் பிரிவுகளில் இத் செயற்றிட்டம் SOND (அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு ) நிறுவனத்தின் அனுசரனையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும், அவ் மக்களை சரியான முறையில் ஆற்றுப்படுத்தும் பொறிமுறையை எவ்வாறு முன்னெடுக்கலாம் எனவும் தெரிவித்துடன், இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் விடயங்கள் நலிவுற்ற சமுதாயத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சமூக மட்ட அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் இவ் விடயங்களில் ஈடுபடுத்துமாறும் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் யூன் 16ம் திகதி 2.00 மணிக்கு சமூக மட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களையும் இணைத்து கூட்டத்தை நடாத்துமாறு கேட்டுக்கொண்டாா்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்களை SOND நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு.செந்தூர்ராஜா அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட சமுர்த்திப் ணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர்,யாழ்ப்பாண உதவி பிரதேச செயலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர்,பிரதேச செயலக பெண்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், SOND நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6