தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் திரு ப. பிரபாகர் தலைமையில் இன்றைய தினம் (01.07.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார். அரசாங்க அதிபர் அவர்கள் தமது பிரதம விருந்தினருரையில், தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் இந் நிகழ்வானதுதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், ஒருவருடைய வாழ்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமானது எனவும் அந்தவகையில் 2021.01.01 இலிருந்து பிறந்த பிள்ளைகளுக்கு - சர்வதேச தரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்படானது 08 ஆவது மாவட்டமாகவும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று விநியோகிக்கப்படுவது சிறப்பான விடயம் எனவும் தெரிவித்தார். மேலும், QR கோட்டினை உள்ளடக்கியதன் மூலம் இலகுவில் பிறப்புச் சான்றிதழை எடுக்ககூடிய வகையில் அமைந்துள்ளதுடன், ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து "எனது இலக்கம்" என்பது தேசிய அடையாள அட்டை இலக்கமாக வருவதன் மூலம் பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை தெரிந்து கொள்வதும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், இச் சான்றிதழ் தமிழுடன் ஆங்கில மொழியும் சேர்த்து வழங்கப்படுவது சிறப்புக்குரியது எனவும் இதன் மூலம் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு அவசியமற்றதாகின்றது எனவும் தெரிவித்தார். ஆதலால் பெற்றோர்கள் இவ் பிறப்புச் சான்றிதழ் பேணிப் பாதுகாக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பிறப்புச் சான்றிதழை அரசாங்க அதிபர் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் சங்கத்தினால் அரசாங்க அதிபர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டமைக்காக அரசாங்க அதிபருக்குபொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி பதிவாளர் நாயகம், காணிப் பதிவாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதிவாளர்கள், கிராமிய பிரதேச பதிவாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 4 4 5 6 7 8 9 10 11 12 13