இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் விளையாட்டு பாடசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விளையாட்டு அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பிற்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களைத் தெரிவு செய்யும் போது நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும், தொடர்ச்சியாக உரிய பராமரிப்புத் தேவை எனவும் தெரிவித்து திட்டங்களை ஆராய்ந்தார்.
இதன் போது கல்லூரி அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன் அவர்களால், கல்லூரியில் தற்போது பாவனையில்லாத நீச்சல் தடாகத்தின் புனரமைப்பின் தேவைப்பாடு, மைதானத்தின் வடிகாலமைப்பு மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு. எம். கோகிலதாஸ் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு. யே. நிரோஷானந், ஆகியோர் கலந்து கொண்டனர்.






