மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் வழிக்காட்டுதலின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் ofERR ceylon அனுசரனையுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
பாலியல் அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்ளை வைத்து பராமரிக்கும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்கள் ,
பெண்கள் பாதுகாப்பு இல்லங்களின் அடிப்படை நெறிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான
வழிகாட்டுதல்கள், தங்குமில்ல வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வது, தங்குமில்ல பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் ,பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட ஆலோசனை ஆகிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல் இடம்பெற்றது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உளநலவைத்தியர் திருமதி. A.வினோதா , வடமாகாண சிறுவர் நன்னடத்தை சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீபா சதாசிவம்
யாழ்ப்பாண சட்டத்தரணி திருமதி யசோதா சுகந்தன் , வலயக்கல்விப் பணிப்பார்கள் தற்காலிக பாதுகாப்பு இல்ல திட்ட இணைப்பாளர், ofERR Ceylon திருமதி இ.கிருஷானந்தி, நிகழ்ச்சித்திட்ட வளவாளர் திருமதி இந்திராணி ராஜேந்திரன், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கி.தயாபரி, JSAC நிறுவனத்தின் உத்தியோகத்தர் ,சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.





