உணவு பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (29.08.2025) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், உணவு பாதுகாப்பு வலையமைப்பினை மேம்படுத்தல் மூலம் வறுமை நிலைமையினையும், உணவுப் பாதுகாப்பற்ற விடயங்களையும் அடையாளப்படுத்தி தரவுகளை சேகரிப்பதாகும் எனவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சரியான தரவுகள் அவசியம் எனவும், தரவுகள் சேகரிப்பு முழுமையடைந்து ஆய்வு செய்யப்பட்டு இவ்வருடத்திற்கான முதலாவது அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் மூலம் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவியாகவிருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக உணவுத் திட்டம் பல ஆண்டுகளாக பாரிய பங்களிப்புக்களை வழங்கிவருவதாகவும், அந்த வகையில் வடக்கு கிழக்கில் உலக உணவுத் திட்டத்தினை கையாண்ட அதிகாரி திரு. நியூமத் அவர்களின் பங்களிப்பினையும் பாராட்டியதுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன்,
உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 34