நெவாட் நிர்வாக கட்டடத் திறப்பு விழாவானது கியூடெக் - கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் யாழ்ப்பாணம் அருட்பணி அன்ரோ டெனிசியஸ் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (29.08.2025) வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு கடற்கரை வீதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மீன்பிடியல் துறைத் தலைவர் கலாநிதி திருமதி எஸ். சுதர்சினி அவர்களும், கெளரவ விருந்தினர்களாக அருட்பணி கி . ஜெயக்குமார் அவர்களும் மற்றும் அருட்பணி ச. இயூஜின் பிரான்சிஸ் அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வானது யாழ் மறை மாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆசியுரை யுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
1 2 3 4 5 5 7 8