இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மீன்பிடியல் துறைத் தலைவர் கலாநிதி திருமதி எஸ். சுதர்சினி அவர்களும், கெளரவ விருந்தினர்களாக அருட்பணி கி . ஜெயக்குமார் அவர்களும் மற்றும் அருட்பணி ச. இயூஜின் பிரான்சிஸ் அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வானது யாழ் மறை மாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆசியுரை யுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






