வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் கலாநிதி. தனன் சேனாதிராஜா அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (16.09.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக பிரதேச செயலகங்களில் வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதேவேளை யாழ் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்போகும் சில திட்டங்களுக்கான நிதியானது வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தின் ஊடாக வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
வேல்ட் விசன்( World vision )பிரதிநிதிகளான தேசிய வள மேம்பாட்டுத் திணைக்களத்தின் பங்குதாரர் ஷாலோமி செல்வராஜ் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.ஜீட் நிஷாந்தன் ஆகியோா் பங்குபற்றினர்.
 
1 2 3 5