1நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "பிரஜா சக்தி" வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜீலை மாதம் 04ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால் பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (19.09.2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான செயலமர்விக்கு வடக்கு மாகாண சபையினுடைய பிரதம செயலாளர் சார்பில் வருகை தந்துள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு ஆழ்வார்பிள்ளை சிறி அவர்களுக்கும் சனாதிபதி செயலக உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்களுக்கும் கிராமிய அமைச்சினுடைய பணிப்பாளர்கள், வடக்கு மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள் ,மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் ,உதவிப் பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர்கள்,வடக்கு மாகாண சபையினுடைய பிரதிப்பிரதம செயலாளர் உட்பட ஏனைய திணைக்களங்களினுடைய தலைவர்கள் , மத்திய மாகாண அரச திணைக்களங்களினுடைய தலைவர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டு தனது தலைமையுரையில் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் முக்கியமானதாக இந்த பிரஜா சக்தி திட்டம் காணப்படுகிறது எனவும் சனாதிபதி செயலகதினால் மூன்று வகையான கொள்கை பிரமாணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அதிலும் முதலாவதாக தூய்மை இலங்கை (Clean srilanka) திட்டமாகும். இந்த திட்டங்களின் ஊடாகவே அரசாங்கம் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் இரண்டாவதாக பிரஜா சக்தி காணப்படுவதாகவும் மூன்றாவதாக டிஜிட்டல் ஶ்ரீலங்கா (Digital srilanka) உடன் சேர்ந்ததாக டிஜிட்டல் அரசுத்தொகுப்பு (Gov pay) காணப்படுவதாகவும் இவ்விரண்டும் திட்டங்களும் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். மேலும் சனாதிபதி செயலகம் மாவட்டங்களினுடைய அரசாங்க அதிபர்களுக்கு இது தொடர்பான போதுமான தெளிவூட்டல்களை வழங்கி மாகாண மற்றும் மாவட்டங்களில் இச் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் "வளமான நாடு அழகான வாழ்க்கை " என்ற தொனிப் பொருளில் இந்த பிரஜா சக்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்ததோடு பொருளாதாரத்தினை மட்டும் வைத்து வறுமையினை தீர்மானிக்க முடியாதெனவும் அதனோடு இணைந்ததாக கல்வி, சுகாதாரம்,சிறந்த வாழ்க்கைத்தரம், மனப்பாங்கு போன்றன முக்கியமான கருப்பொருளாக இருப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்திலே இந்த பிரஜா சக்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதன் மூலம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை ஒன்றினைந்து செயற்படுத்த முடியும் எனவும் பிரதேச,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி அனைவரும் ஒன்றினைந்து இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதனை குறைத்து கொள்ளக்கூடிய ஏதுநிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இதன் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் "செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை" எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் குறித்த செயலமர்வு சம நேரத்தில் சிங்கள மொழி மூலமாக மாவட்ட செயலக திட்டமிடல் கிளையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13