மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட தொழிற் சந்தையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிடல்
மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்திய விசேட தொழிற்சந்தையானது இன்றைய தினம் (22.09.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி. ப. 01.30 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இச் தொழிற் சந்தையினை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மற்றும் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் பார்வையிட்டு, தொழிற்சந்தையில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடினார்கள்.