யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் கிராமிய அபிவிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், பனை விதை நடுகைக்கான நிதி ஒதுக்கீடு, அஸ்வெசும திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்தியவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன், முடிவுறுத்தாத வேலைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு திட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






