சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் UNFPA நிறுவனத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புடன் JSAC நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் பணியாற்றுபவர்கள் தொடர்பான தகவல் திரட்டு தயாரித்தல் நிகழ்வு (Digital Service Directory Preparation Programme) உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) இணைப்பாளர் திரு. ந. சுகிர்தராஜ், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி தயாபரி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மருத்துவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுதாயம் சார்ந்த சீர்திருத்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5