Little Master பாலர் பாடசாலையின் - யாழ்ப்பாணம், மல்லாகம், தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கிளைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (01.10.2025) சந்தித்து நல்லாசியினைப் பெற்றுக்கொண்டனர்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட 9 கிளைகளில் இருந்தும் 60 ஆசிரியர்களின் வழிநடத்தலுடன் 295 மாணவர்கள் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.






