இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் அக்ரஹார மருத்துவக்காப்புறுதி அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் அக்ரஹார நிறுவனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அக்ரஹார விடயங்களை தெளிவுபடுத்தி அரச உத்தியோகத்தர்களை தங்கத் (gold) திட்டத்தில் உள்வாங்குவதை நோக்கமாக கொண்டும் இக்கலந்துரையாடல் அமைவதாகவும், 1997 ஆம் ஆண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டு பின்னர் 2006ஆம் ஆண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியமாக மாற்றப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் நிறுவன செயற்பாடுகள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதால் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுகள் பெற்றுக் கொள்ளக்கூடியடிதாக இருப்பதாகவும், இருந்த போதும் சில இடர்பாடுகளை எதிர்நோக்குவதாகவும் விடய உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோத்தர்களையும் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொண்டு இதன் மூலம் முழுமையான பயனை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்
இக்கலந்துரையாடலில் அக்ரஹார மருத்துவக்காப்புறுதியின் நன்மைகள் , தங்கத்திட்டத்தின் பிரத்தியேக நன்மைகள், மற்றும் இத்திட்டத்தின் மூலம் அங்கத்தவர்களுக்கு மற்றும் அவர்களுடன் தங்கி வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச கொடுப்பனவுகள், அரச மற்றும் தனியாா் வாகன காப்புறுதிகள் தொடர்பான விடயங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில்பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, உள்ளகக் கணக்காய்வாளர் திரு.எஸ். ரமேஸ்குமாா் , அக்ரஹார திட்ட தலைவர் கலாநிதி திரு.விசாக வனசிங்க, பிராந்திய முகாமையாளர் திரு.தனுஷ்க குமார, சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர் திரு.நுவான் திசநாயக்க, ,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் அக்ரஹார காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர்கள் ,மாவட்ட, பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






