2024ம் ஆண்டில் தேசிய ரீதியாக சமுர்த்தி வங்கிச் சேவை மற்றும் சமுர்த்தி கொடி வேலைத்திட்டம் ஆகியவற்றில் யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாம் இடம் - அரசாங்க அதிபருக்கு விருது வழங்கி கெளரவிப்பு
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஏற்பாட்டில்
"இது உங்களுக்காக மட்டுமே செய்யப்பட்ட நலன்புரித் திட்டம் "சமூர்த்தி திட்டத்தின் மூலம் சுய ஆற்றலுடன் வலுவூட்டப்பட்டவர்களை கீழ் மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை எடுத்துச் செல்லும் முயற்சியின் பொருட்டு மக்கள் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாராட்டும் தேசிய பாராட்டு விழாவானது
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர்
கலாநிதி உபாலி பன்னிலஹே அவர்களின்
தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க அவர்கள் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சி.டி. களுவாராச்சி ஆகியோரது
பங்கேற்புடன் இன்றைய தினம்(28.10.2025) மு.ப. 9.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது.
சமுதாய மட்ட மற்றும் பிரதேச மட்ட அமைப்புக்களையும் அதன் தலைவர்களையும் பாராட்டும் நிகழ்வு,
தொழில்முனைவோர் ஊக்குவிப்பு,
போதைப்பொருள் மற்றும்
புகையிலை எதிர்ப்பு சமுர்த்தி கொடி தினம்.
வங்கி ஹரசர ஆகிய
நான்கு கருப்பொருள்களின் கீழ்
சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய ரீதியாக வங்கிச் சேவையில் இரண்டாம் இடத்தினைப் பண்டத்தரிப்பு சமுர்த்தி வங்கி பெற்றுக்கொண்டதற்கான பாராட்டு விருதும், சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு சமுர்த்தி கொடி வேலைத்திட்டத்தில் அதிகூடிய வருமானம் பெற்றமைக்காக வெள்ளிப் பதக்கமும் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சமூக வலுவூட்டல் தொடர்பான ஒரு தொகுதி வெளியீடும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வெளியீடும் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர் பற்றிய தகவல்களைக் உள்ளடக்கிய நிகழ்நிலை புத்தக வெளியீடு போன்ற சிறப்பு அம்சங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டன.
சமுதாய அடிப்படை வங்கிகளின் தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பண்டத்தரிப்பு வங்கி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன், நல்லூர் பிரதேச செயலகத்தின் கல்வியங்காடு வங்கியும் வேலணை பிரதேச செயலகத்தின் வேலனை வங்கியும் தரப்படுத்தலில் உள்ளடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான அதிக லாபம் ஈட்டிய வங்கிகளில் மருதங்கேணி அம்பன் வங்கியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் மற்றும்
புகையிலை எதிர்ப்பு சமுர்த்தி
கொடி தினத்துக்குரிய நிதி சேகரிப்பில் கோப்பாய் பிரதேசத்தின் கோப்பாய் வங்கி விருதினைப் பெற்றுக் கொண்டது.
சமுர்த்தி வங்கி தரப்படுத்தலில் நல்லூர், கரவெட்டி வங்கிகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் வங்கிகளின் நல்லூர், கரவெட்டி , காரைநகர் , சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், சங்கானை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களின் வங்கிகள் A தரத்துக்குரிய வங்கிச் சங்கங்களாக தெரிவு செய்யப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் யாழப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி, சண்டிலிப்பாய் முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மதியழகன், மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி முகாமையாளர், மாவட்ட சமூக அடிப்படை அமைப்பு முகாமையாளர்,மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மக்கள் தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9