உலக உணவு தினத்தினை முன்னிட்டு - கரித்தாஸ் - கீயூடெக் நிறுவனத்தினால் இரசாயன பாவனையற்ற வீட்டுத் தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இன்றைய தினம் (30.10.2025)காலை 09.30 மணிக்கு நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி அ. அன்ரோ டெனிசியஸ் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம் புனித மாட்டீன் குருமடத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனையினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ விருந்தினராக அருட்பணி ப. ஜோ. ஜெயரட்ணம் அவருகளும், சிறப்பு விருந்தினராக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ. சிறிரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.மேலும் இந் நிகழ்வில் மதகுருமார்கள், திட்ட இணைப்பாளர் திருமதி லலிதா விக்டர், உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. வி. தயாபரன், கரித்தாஸ் - கியூடெக் நிறுவன உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






