2025 ஆம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு “நூற்றாண்டு கண்ட இலங்கை சிரேஷ்ட பிரஜைகளுக்கு வாழ்த்துக்கள்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற 100 வயதிற்கு மேற்பட்ட 17 சிரேஷ்ட பிரஜைகளில் நேற்று முன்தினம் (04.11.2025) வேலணை பிரதேச செயலக பிரிவின் நயினாதீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 104 வயதினையுடைய திருமதி சின்னத்துரை தங்கம்மா மற்றும் 103 வயதினையுடைய திருமதி ஐயாத்துரை சிவக்கொழுந்து என்பவர்களின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வேலணைப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேரடியாக அவர்கள் இல்லங்கள் சென்று சென்று கெளரவிக்கப்பட்டார்கள். இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 105 வயதினையுடைய திருமதி சண்முகம் பூமணி என்பவரும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவின் சுண்டிக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 102 வயதினையுடைய திருமதி அருளானந்தம் செபமாலை என்பவரும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்கனவே கெளரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5