மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை பதிவு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை பதிவு செய்தல் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளாக அரசாங்க அதிபரால் அவர்களால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும், டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் விரிவுரையாளர்களை நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாளும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
2.மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் NVQ Level 03 மற்றும் NVQ Level 04 கற்கைநெறிகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதற்கு அமைய, எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
3.ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யாது தொழிற்கல்வி நடாத்தி வரும் நிறுவனங்கள் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பிரதம கணக்காளர், தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், , மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






