விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய ரீதியாக வருடம் தோறும் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தின்ஒழுங்கமைப்பில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுடன் தொடர்புடைய உடல் அசைவுகள் மற்றும் யோகா தொடர்பான பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (10.12.2025) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், மக்களுக்கான உணவு விநியோக செயற்பாடுகளில் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தர உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இப் பயிற்சி தொடர்பான போதிய அறிவு, விருப்பம் காணப்பட்டாலும் அதனை செய்ய முடியாத சமூகப் பழக்க வழக்கத்திற்கு நாம் ஆட்கொண்டுள்ளதாகவும், மேலைத்தேய நாடுகளில் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், நாம் அவ்வாறு செய்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், முன்பு உணவே மருந்தாகவும் தற்போது மருந்தே உணவாகவும் காணப்படுவதாகவும், உணவு கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாகவும், உடற்பருமனை குறைத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
வாழ்வாதாரத்துக்கு முக்கியமான உடல் அசைவுகள் மற்றும் யோகா பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் எரோபிக் விளையாட்டுடன் கூடிய உடல் அசைவுகள் மற்றும் விளையாட்டு உடற்பயிற்சி ஈடுபடும்போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் தொடர்பாகவும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. கனகரத்தினம் கனகராஜா யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் பேராசிரியர் சி. சபாஆனந்த் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட விளையாட்டு துறை இணைப்பாளர், விளையாட்டு துறை சார் உத்தியோகத்தர்களும் மற்றும் மாவட்ட செயல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6 7 8 9 11 12 13