2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.01.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அபிவிருத்தி திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று நிறைவேற்றிய மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்து தர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், கடந்த வருடம் நிறைவேற்றிய அபிவிருத்தித் திட்டங்களை அனுபவமாகக் கொண்டு இவ்வாண்டு மேலும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.






