யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (21.01.2026) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது. இத் தைப்பொங்கல் நிகழ்வில் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்களின் அரசாங்க அதிபருடனான சந்திப்பின் பின்னர் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இணைந்து பங்குபற்றி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தைப்பொங்கல் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.






