யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இணையத்தின் தலைவர் திரு.ந.சுகிர்தராஜ் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026) காலை 10.30 மணிக்கு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7