மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மண்டைதீவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச துடுப்பாட்ட மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருகை தந்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ். அச்சுதன் அவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் . இதன்போதுஅரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும், தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளராகவும் பணியாற்றி இலங்கை நிர்வாக சேவைகள் விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்று விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக உயர்பதவி பெற்று யாழ்ப்பாணத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளார் எனவும், உயர்பதவியினைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
 
 
1 2 3 4