யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலைய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின கூட்டுறவு சேவைகள் பிரதி அமைச்சர் கெளர உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.02.2026) பி. ப 04.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. உபல் சாந்த டி அல்வீஸ், தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் தலைவர் திரு. வசந்த கே. பி. சேனநாயக்க, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமையிடும் பொருட்டு நிறுவப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் நிறுவனத்தினைக் கூட்டிணைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான வழிவகைகள் ஆராயப்பட்டதுடன், நாட்டிலுள்ள 18 பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையினை ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட விவசாய சம்மேளத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர், ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொருளாதார மத்திய நிலைய கடை குத்தகைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8