யாழ். மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான நான்காம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.04.2026) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நான்காம் கட்டமாக உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன் அவர்களால் சமூக சக்தி குழுவின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார். இக் கூட்டத்தில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், குறித்த பிரதேச செயலகங்களின் பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடய உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9