யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்களின் கெளரவிப்பு நிகழ்வு நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. மனுவல் வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (22.04.2026) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் நலன்புரி சங்கத்தின் போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்திய அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம் ஏனைய சக திணைக்களங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு வருகின்றது எனவும், அந்த வகையில் நலன்புரிச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி நோக்கும் போது
மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், அரசசேவையில் 25 வருட சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட இருக்கின்றார்கள் எனவும், இம் முறை மாவட்டச் செயலக உத்தியோகத்தர் திரு. அனுரகாந்தன் அவர்களின் மகனும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமான செல்வன் அ. விஸ்வகாந்தன் மாவட்ட ரீதியாக கணிதப் பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயம் எனவும், அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியாக சாதனை பெறுகின்ற பிள்ளைகளையும் கெளரவிக்கின்ற நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோளையும் முன்வைத்தார். மேலும், மாவட்டச் செயலகம் ஓர் குடும்பமாக இணைந்து மேற்கொண்ட நலன்புரிக்கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்தவுடன், கெளரவம் பெறுபவர்கள் அனைவரது வாழ்வும் ஒளிமயமானதாக இருக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வில் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தமது அனுபவப் பகிர்வினை வழங்கினார்கள். இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், அரசசேவையில் 25 வருட சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள், 2024 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 36