உற்பத்தி திறன் தொடர்பாக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சிறு தொழில் முயற்சியாண்மைக்கான 03 நாள் வழிகாட்டல் பயிற்சி பட்டறை இன்றைய தினம்(23.06.2026) மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இந்த பயிற்சி நெறி பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதாவது சிறு தொழில் முயற்சியாளர்களுடைய உற்பத்தியை அதிகரிப்பதும் மற்றும் அவர்களுடைய உற்பத்தி திறன் சார்ந்த செயற்பாடுகளை அதிகரிப்பதும் என்ற அடிப்படையில் இப்ப பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பிரதேச மட்டங்களில் பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், இந்த இரண்டு விடயங்களை ஒருமித்த வகையில் முன்னெடுக்கும் போது முயற்சியாண்மை செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒரு தொழில் முயற்சியாளருக்கு அறிவு, திறன், மனப்பாங்கு என்ற மூன்று செயற்பாடுகளும் முக்கியமானதாக காணப்படுகின்றது. இதில் மிக மிக முக்கியமாக அவர்களுடைய மனப்பாங்கு வளர்ச்சி. சில வேளைகளில் இது சிலருக்கு கடினமாக இருக்கும் சிலரின் மனப்பாங்கு அபரிவிதமான எண்ணங்களை கொண்டதாகவும் இருக்கும், ஒரு சிறு தொழில் முயற்சியாளரைப் பார்த்தால் அவருடைய முழு செயற்பாடும் எப்படி உள்ளது மற்றும் அவர்களின் உற்பத்தித் திறன் சார்ந்த செயற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை கவனிக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு இன்றும் புலம்பெயர் மக்களிடம் கிராக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இப் பயிற்சி பட்டறை மூலம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர்பான முன்னேற்ற விபரங்களை அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டார். இச் செயலமர்வில் வளவாளராக மன்னார் மாவட்டச் செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர் திரு. P. R. றொபின்சன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார். இச் செயலமர்வில் சிறு தொழில் முயற்சிப் பிரிவின் பதில் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ்.சஜீபன், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6