யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அதிமேதகு சனாதிபதி மற்றும் கெளரவ அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட "யாழ்ப்பாண மாவட்டச் செயலக மடல்" - இன்றைய தினம் (09.07.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்களிடம் அமைச்சில் வைத்து கையளித்து வெளியிடப்பட்டது. மேலும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ பி. ருவன் சேனாரத் மற்றும் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார ஆகியோரிடமும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக மடல் அரசாங்க அதிபரால் கையளிக்கப்பட்டது.
 
1 2 3 4 5 6