யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன் நலன்புரிக் கழகம் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம் (17.07.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது. அரசாங்க அதிபரின் வழிப்படுத்தலில் கலைத்துறையுடன் தொடர்புடைய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் குழுப்பாடல் மற்றும் பல்லியம் இசை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. இக் கலை நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்தி வழங்கிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்திருந்தனர்.
இதன்போது குழுப்பாடலினை வழங்கிய திருமதி. நிரஞ்சலா ஸ்ரீரங்கன் (வயலின்), திருமதி.சுபேந்தினி லிங்கேஸ்வரன் (இசை), திருமதி.நிரஞ்சினி றகுணன் (இசை), திருமதி.மேகலா லக்ஸ்மன் (இசை), திருமதி.துக்ஷாந்தி பபிக்ஷன் (இசை), திருமதி. மஞ்சுளா அகிலன் (இசை), திருமதி.அபிசுஜா சஞ்சீவ் (இசை), திருமதி. சாந்திமலர் ஜெயபாஸ்கரன் (இசை), திருமதி அபிராமி துஜந்தன் (இசை), திரு.சதீஸ்குமார் நடராஜா (மிருதங்கம்), திரு.தே.விஜயச்சந்திரா (தபேலா) ஆகியோரும், 'பல்லியம்' இசை நிகழ்வினை வழங்கிய திருமதி. நிரஞ்சலா ஸ்ரீரங்கன் (வயலின்), திருமதி.சுபேந்தினி லிங்கேஸ்வரன் (வயலின்), திருமதி.நிரஞ்சினி றகுணன் (வயலின்), திருமதி. சிவகௌரி இந்திரஜித் (வயலின்), திருமதி. மேகலா லக்ஸ்மன் (ஓர்கன்), திருமதி. ஆர்த்தி தேவநாதன் (புல்லாங்குழல்), திருமதி. மஞ்சுளா அகிலன் (வீணை), திரு.சதீஸ்குமார் நடராஜா (மிருதங்கம்), திரு.தே.விஜயச்சந்திரா (தபேலா) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.






