தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத குருமார்களுக்கான சமயப் பயிற்சியில் சித்தியடைந்த மத குருமார்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி (சிங்களம்) பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையிலும், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. திலக் நந்தன கெட்டியாராச்சி அவர்களின் பங்கேற்புடனும், இன்றைய தினம் (24.07.2026) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத குருமார்களுக்கான சமயப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 23 மத குருமார்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி (சிங்களம்) பாடநெறியை பூர்த்தி செய்த 87 அரச உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந் நிகழ்வில் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் (மொழிப்பயிற்சி) திரு. டி.டி.எஸ்.எம். ஜெயவீர, ஆணையாளர் (மொழிபெயர்ப்பு) திரு. சமிந்த மகலேகம, பிரதம கணக்காளர் திரு. எஸ். விக்னராஜ், மொழி ஆய்வுகூட மேற்பார்வையாளர் திரு. லசித் நாலந்த மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, இரண்டாம் மொழி (சிங்களம்) வளவாளர்களான திரு. ஏ. சிறிரங்கன் மற்றும் திரு. எஸ். நந்தன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளருமான திரு. நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 3 9 6 5