யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் கடந்த ஜூன் 29ஆம் திகதி யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமிக்கப்பட்டார். அவர் முன்னதாக கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற மேதகு ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்குப் பின்னர், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் பொறுப்பேற்றார். புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் சிறப்பு சமய நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், துறவிகள், மறைமாவட்டப் பிரதிநிதிகள், வட மாகாண கெளரவ ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பெருமளவான இறைமக்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14