யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.






