நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்ப நிகழ்வு
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் (29.01.2022) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நீதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சட்டத்தரணியுமான கௌரவ M.U.M.அலி சப்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றதோடு, இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா மற்றும் நீதியமைச்சின் செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
இந் நடமாடும் சேவையானது நேற்றும், இன்றும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்நடமாடும் சேவையில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், ஆட்பதிவு திணைக்களம், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தலைமை பதிவாளர் திணைக்களம்,கடன் இணக்க சபை திணைக்களம்,சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம்,தேசிய புனர்வாழ்வு பணிப்பக தகவல் மையம்,மாகாண காணி நிர்வாகத் திணைக்களம்,மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம்,பனை அபிவிருத்தி சபை, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு,இலங்கை தொழிற்பயிற்சி ஆணையகம் உள்ளிட்ட நீதி அமைச்சின் கீழுள்ள அனைத்து அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.