சிறுவர் தங்குமிட விடுதிகள் மற்றும் சிறுவர் இல்ல பணியாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 29.04.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் நான்கு சிறுவர் தங்குமிட விடுதிகள் கலந்துகொண்டன. இதில் சிறுவர் தங்குமிட விடுதிகள் மற்றும் சிறுவர் இல்ல பணியாளர்கள் அர்ப்பணிப்பான செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென குறிப்பிடப்பட்டது.
மேலும், இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், உளவளத்துணை நிபுணர் Dr.திரு.எஸ்.சிவதாஸ், உள சமூக பணியாளர் திரு.வாகீசன், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் திரு.பா.கோபி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.இ.செந்தூரன், சிறுவர் நன்நடத்தை திணைக்களம் (தலைமைப்பீடம்)திரு.ஆர்.ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 29child1 29child2 29child3