யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் SIYB நிறுவனமும் இணைந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் "தொழில் ஆரம்பித்தலும் மேம்படுத்தலும்" தொடர்பான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திரு.ஆர்.ஜெயல்ட் அந்தோனி (SIYB) அவர்களின் தலைமையில் (30.04.2022) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.என்.சிவரூபன் அவர்களும், சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.வ.குமாரதீபன் (யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும், மற்றும் கௌரவ விருந்தினராக திரு.கு.கௌதமன்( யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும் திரு.A.ஆரியசுதன் (SIYB), திரு.கே.கருணாகரன் (மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், யாழ்.மாவட்டச் செயலகம்), மற்றும் உறுப்பினர்கள் (SIYB) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்

 30certificate1