யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பான முதன்மைத்திட்டம் (Master Plan) தயாரிப்பதற்கான முன்னேற்றக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2022.05.09) அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி),பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதிப் பதிவாளர் நாயகம், உள்ளக கணக்காய்வாளர், மோட்டார் திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்

 9build1 9build2