தேசிய சாரணர் தலைமைக் காரியலயத்தின் பணிப்பின் கீழ் யாழ்.மாவட்ட சாரணர் சங்கமானது தேசிய சாரணர் சேவை மாதத்தை முன்னிட்டு 03.08.2022 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் சாரணர் சேவை மாத அட்டைகளை குருளை சாரணர்கள், கனிஷ்ட சாரணர்கள், சிரேஷ்ட சாரணர்கள், பெண் சாரணர்கள் ஆகியோரிற்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
இச் சாரணர் சேவை மாத அட்டை செயற்திட்டமானது நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்படுவதோடு, இச் சேவையின் மூலம் திரட்டப்படும் நிதியானது சாரணர் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாவட்ட சாரணிய ஆணையாளர் இ.தவகோபால் மற்றும் சிரேஷ்ட சாரணர்கள், கனிஷ்ட சாரணர்கள், பெண் சாரணர்கள்,குருளை சாரணர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 

 3scouts1

3scouts3 3scouts2 3scouts4