யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மேற்கொள்ளப்படும் செலவீனங்களை சிபார்சு செய்தல், அனுமதியளித்தல், அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான மென்பொதி தொடர்பான அறிமுக நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 13.09.2022 காலை 8.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 
 
மேலும், எதிர்காலத்தில் இம் மென்பொதி ஊடாக நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

13swin1 13swin2