உணவுக் கையிருப்புப் பாவனை மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான இணைய வழி கலந்துரையாடல் (16.09.2022) ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இணையவழி மூலம் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.





