யாழ்ப்பாண மாவட்ட செயலக  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அலகின் ஏற்பாட்டில், Distance Learning Centre Ltd நிறுவனத்தினால் இணையவழி நிகழ்நிலை  ஊடாக நடாத்தப்பட்ட Mobile Apps Development பயிற்சியில் பங்குபற்றிய மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (13.10.2022 ) காலை  8.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மாவட்ட செயலக  திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் , தலைமை நிர்வாக அதிகாரி (DLC ) திரு.ஜி.  அருளானந்தம், கற்றல் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் (DLC ) திரு. கீர்த்தி விஜேசேகர, IT முகாமையாளர் திரு.டி. அருண புத்திக   மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 13cer1 13cer2 13cer3

13cer6 13cer4 13cer5