வாகன உடைமை மாற்றத்திற்கான ஒருநாள் சேவையானது (22.10.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களால் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2022.10.22 ஆந் திகதி முதல் பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சாதரண சேவையில் உடைமை மாற்றத்திற்கான சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமான ஆவணங்களையும் இணைத்து உடைமை மாற்றப்படிவங்களை நேரில் வந்து சமர்ப்பிப்பதன் மூலம் ஒருநாள் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.






