UNDP நிறுவனத்துடன் இணைந்து சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறையினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குவதற்கென 40 அவசரப் பொதிகள் மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் (26.10.2022) மாலை 3.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், UNDP நிறுவன பிரதிநிதிகள், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






