2023 ஆம் ஆண்டுக்குரிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் (20.10.2022) வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் பொருளாதார மட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சித்திட்டங்களை Fairmed நிறுவனம் முன்னெடுத்துவரும் நிலையில் அடுத்து வரும் இரண்டு வருட காலத்திற்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், Fairmed நிறுவன தேசிய இணைப்பாளர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்






