யாழ்ப்பாண மாவட்டச் செயலக நான்காம் காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (04.11.2022) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், இணைய நிகழ்நிலை வழியாக அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் (Department of Management Audit), மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.






