சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மீளாய்வு கூட்டமானது (25.11.2022) காலை9.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி பணிப்பாளர் தி.விஸ்வரூபன் தலைமையில் இடம்பெற்றது.
சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள், சமுதாய அடிப்படை அமைப்பு பதிவினைப் புதுப்பித்தல், பிரதேச அமைப்புக்களிற்கு சொந்தமான நிதியங்கள், அருணலு கடனை வழங்குவதன் முன்னேற்றங்கள், சமுர்த்திப் பசுமை நிறை தாயக மரநடுகை வேலைத்திட்டங்களும் அவற்றின் செயற்பாடுகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமைப்பட்டியல் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் சமுதாய அமைப்புக்களின் 2023ஆம் ஆண்டின் செயற்பாட்டுத்திட்டமிடலை 2022.12.15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச அமைப்பிற்கு அல்லது சமுதாய அடிப்படைவங்கிச்சங்கத்திற்கு வழங்கவேண்டும், பிரதேச அமைப்புக்களின் 2023 ஆம் ஆண்டின் செயற்பாட்டுத்திட்டமிடலை 2022.12.20 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்திக் கணக்காளர் திரு. இ.முருகதாஸ், சிரேஸ்ட முகாமையாளர் திரு. ஆ. ரகுநாதன், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், வங்கிச்சங்க முகாமையாளர்கள், சமுதாய மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.





