கைத்தொழில் அபிவிருத்தி சபையின் செழிப்பான தேசத்தை உருவாக்குவதற்கு தயார்ப்படுத்தலும் ஆரம்பித்தலும் என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்ட முன்வைத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (21.12.2022) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்வைத்தல் கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும அவர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபை பணிப்பாளர் நாயகம், பிராந்திய அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர், சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர், வட மாகாணப் பணிப்பளர், யாழ் மாவட்ட உதவிப்பணிப்பளர், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கைத்தொழில் துறை சார்ந்த நிறுவனத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






