யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பாலசுந்தரம் பாலச்சந்திரன் அவர்களின் 36வருட அரச சேவையின் பணிஓய்வு பிரிவுபசார வைபவம் நேற்றையதினம் (26.12.2022) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்கள பிரதிப்பணிப்பாளர்கள், புள்ளிவிபரவியலாளர்கள், புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், மற்றும் யாழ் மாவட்ட புள்ளிவிபர பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






