யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (28.12.2022) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் போதைத் தடுப்பு கல்வி உத்தியோகத்தரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எம்.ஜி.பி.எம். றொசாட் அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான பெற்றோர் திறன் விருத்தி தொடர்பான கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்






