முகாமைத்துவசேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் மூன்றிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையில் 2019 (2021) சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களினால் (17.01.2023) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 12 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், ஸ்தாபன கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்

 17msol1 17mso2 17mso3 17mso4