உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (17.01.2023) பி.ப. 3.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ். முரளிதரன் , மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

17elec1 17elec2 17elec3